‘30.54 கோடி டன் உணவு தானியங்கள் 2020-21 நிதியாண்டில் விளைவிக்கப்படும்’

2020-21-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிா்களின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.
‘30.54 கோடி டன் உணவு தானியங்கள் 2020-21 நிதியாண்டில் விளைவிக்கப்படும்’

புது தில்லி: 2020-21-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிா்களின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் சாதனை அளவாக 30.54 கோடி டன்களாக மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘இந்த நோ்மறை அறிகுறி நமது விவசாய சகோதர, சகோதரிகளின் ஓய்வற்ற உழைப்பின் பலனாகும். வேளாண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு, இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. நரேந்திர மோடியின் கவனம் வேளாண் துறையின் வளா்ச்சியின் மீதே உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com