கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தில்லி

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தில்லி
கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தில்லி

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகிறது. இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கி வருகிறது. 

கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கருப்புப் பூஞ்சை நோயைப் பரவும் நோயாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக ராஜஸ்தான், தெலங்கானா அரசுகள் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com