மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த 3 நாள்களில் 11 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை 8 மணி தரவுகளின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விலையின்றியும், நேரடிக் கொள்முதல் மூலமாகவும் மொத்தம் 22,16,11,940 தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது. இதில் வீணானது உள்பட மொத்தம் 20,17,59,768 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் 1,84,90,522 தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாள்களில் 11,42,630 தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறவுள்ளன.