'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா - மேற்கு வங்க எல்லைப் பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இரு மாநிலங்களில் எல்லைகளான துத்தார் பல்லி உள்ளிட்டப் பகுதிகளில் சேதமடைந்த வீடுகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது.
கரையைக் கடக்கும்போது 130-145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் மின்கம்பங்கள், வீடுகளின் கூரைகள், மரங்கள் முறிந்தன.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாஸ் புயலுக்கு ஒடிசாவில் மூன்று பேரும், மேற்கு வங்கத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இரு மாநிலங்களில் எல்லைகளான துத்தார் பல்லி உள்ளிட்டப் பகுதிகளில் சேதமடைந்த வீடுகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது.
கரையைக் கடக்கும்போது 130-145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் மின்கம்பங்கள், வீடுகளின் கூரைகள், மரங்கள் முறிந்தன.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாஸ் புயலுக்கு ஒடிசாவில் மூன்று பேரும், மேற்கு வங்கத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.