கா்நாடகத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 22,823 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 22,823 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,46,821 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 52,253 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 21,46,621 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
3,72,373 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் 401 போ் இன்று உயிரிழந்துள்ளனா்.
கா்நாடகத்தில் இதுவரை 27,806 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.