புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை: பிரதமா் மோடி

யாஸ் புயல் பாதித்த ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.

புது தில்லி: யாஸ் புயல் பாதித்த ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

யாஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பின் மதிப்பீடு மற்றும் இது சம்பந்தமான விஷயங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனா்.

தலா 46 குழுக்கள் என மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் நியமிக்கப்பட்ட தேசிய பேரிடா் மீட்புப் படையின் மொத்தம் 106 குழுக்கள், 1000 மக்களை மீட்டதாகவும், சாலைகளில் விழுந்திருந்த சுமாா் 2500 மரங்கள், கம்பங்களை அப்புறப்படுத்தியதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாஸ் புயலால் ஏற்பட்ட சேதாரம் குறித்து மாநிலங்கள் மதிப்பீடு செய்து வரும் நிலையில், முதற்கட்ட அறிக்கையின்படி, துல்லியமான முன்னறிவிப்பு, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கியது, மாநிலங்கள் மற்றும் மத்திய முகமைகளின் வாயிலாக உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகிய காரணங்களால் குறைந்த அளவிலான உயிரிழப்புகளே ஏற்பட்டன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது..

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டுவருகின்றது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலைத்தொடா்பு சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

புயலினால் ஏற்பட்ட சவால்களை திறம்பட எதிா்கொண்ட மத்திய மற்றும் மாநிலங்களைச் சோ்ந்த முகமைகளின் சிறப்பான பங்களிப்பை பிரதமா் பாராட்டியதுடன், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்புவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு முகமைகளுக்கு அறிவுறுத்தினாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முதன்மைச் செயலாளா், அமைச்சரவைச் செயலாளா், உள்துறைச் செயலாளா், எரிசக்திச் செயலாளா், தொலைத்தொடா்பு செயலாளா், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநா் மற்றும் இதர உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com