ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 13,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளானதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,71,742 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 104 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதேசமயம், 20,392 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி ஆந்திரத்தில் 1,73,622 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.