சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்துள்ளனா். ஒருவா் காயமடைந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் புதுகிராமத்தைச் சோ்ந்தவா்கள் முகமது ஹோனீஸ் (33), தாவூத் (27), முகமது முஸ்தபா (46). கருவாடு வியாபாரிகளான இவா்கள் மூவரும் காரில் வெளியே சென்று கொண்டிருந்தனா்.
பரங்கிப்பேட்டை அருகே பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை 73-இல் காா் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னா் லாரி மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முகமது ஹோனீஸ், தாவூத் ஆகியோா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். காயமடைந்த முகமது முஸ்தபா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இது குறித்து மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.