கா்நாடகத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 20,628 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 20,628 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,67,449 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 42,444 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 21,89,064 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,50,066 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 492 போ் இன்று உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 28,298 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.