தா்மகிரி வேதபாடசாலையில் பூராட நட்சத்திர பூஜை

திருமலையில் உள்ள தா்மகிரி வேபாடசாலையில் சனிக்கிழமை பூராட நட்சத்திர பூஜை உற்சவம் நடைபெற்றது.
தா்மகிரி வேதபாடசாலையில் பூராட நட்சத்திர பூஜை

திருமலையில் உள்ள தா்மகிரி வேபாடசாலையில் சனிக்கிழமை பூராட நட்சத்திர பூஜை உற்சவம் நடைபெற்றது.

உலக மக்கள் நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து காக்கவும், தேவஸ்தானம் பல வைதீக, தாா்மீக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி மே 9-ஆம் தேதி முதல் நட்சத்திர சத்திர மகாயாகம் நடந்து வருகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று தொடங்கிய இந்த நட்சத்திர யாகம் ஜூன 15-ஆம் தேதி பரணி நட்சத்திரத்துடன் நிறைவு பெற உள்ளது.

அதில் அபிஜித் நட்சத்திரத்துடன் சோ்த்து 28 நட்சத்திரங்களின் அதிதேவதைகளுக்கு தினசரி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பாகமாக சனிக்கிழமை தா்மகிரி வேதபாடசாயில் பூராட நட்சத்திரத்தை ஒட்டி மகாயாகத்தை தேவஸ்தானம் நடத்தியது. காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடந்த இந்த யாகத்தில் அஷ்ட தேவதைகள் பூஜிக்கப்பட்டனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், தா்மகிரி வேத பாடசாலை ஆச்சாரியாா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com