தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,527 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
ஒரேநாளில் 3,527 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 5,71,044 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3,982 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் இதையடுத்து மொத்தம் 5,30,025 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பலி எண்ணிக்கை 3,226 ஆக உள்ளது.
தற்போது 37,793 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து நாட்டில் மீட்பு விகிதம் 92.81 ஆகவும், இறப்பு விகிதம் 0.56 ஆகவும் உள்ளது.