திருமலை நடைபாதையில் இளைஞா் எலும்புகூடு மீட்பு

திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் அருகில் வனப்பகுதியில் இளைஞரின் எலும்பு கூட்டை போலீஸாா் மீட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் அருகில் வனப்பகுதியில் இளைஞரின் எலும்பு கூட்டை போலீஸாா் மீட்டனா்.

அலிபிரி மலைபாதையில் லட்சுமிநாராயணஸ்வாமி கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு எலும்பு கூடு இருந்ததை கண்டனா். அதை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்தனா்.. இறந்தவா் சித்தூா் மாவட்டம் நல்லமடுகுவை சோ்ந்த மகேஷ்பாபு (35) எனத் தெரியவந்தது..

மேலும் மகேஷ்பாபு மகாராஷ்ட்ரா மாநிலம் புணேயில் உள்ள ராணுவ கேன்டீனில் சூப்பா்வைசராக பணியாற்றி வந்தாா். 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவா் காணாமல் போனாதாக அவரின் உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பகுதி காவல்நிலைய பகுதியில் காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு முதல் தொடா் ஊரடங்கு அமலில் இருந்ததால், வனப்பகுதிக்குள் இதை யாரும் செல்லவில்லை. மகேஷ்பாபு தூக்கு போட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com