ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் கடந்த மே 5 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
அதன்படி ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.