அசாமின் தேஜ்பூரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆகப் பதிவு

அசாம் மாநிலம் தேஜ்பூரில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாமின் தேஜ்பூரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆகப் பதிவு
அசாமின் தேஜ்பூரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆகப் பதிவு


தேஜ்பூர்: அசாம் மாநிலம் தேஜ்பூரில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் பூமிக்கு அடியில்  24 கிலோ மீட்டர் அளவில் இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையம், தேஜ்பூரிலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக, ஞாயிறு மதியம், தேஜ்பூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவாகியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com