தில்லி, தமிழ்நாடு இல்லத்தில் உள்ளுறை ஆணையர்களின் பதவி பெயர்களை மாற்றி தலைமைச் செயலர் வி.இறையன்பு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு இல்லத்தின் முதல்நிலை உள்ளுறை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு கூடுதல் தலைமைச் செயலர், முதன்மை உள்ளுறை ஆணையர் என்று அழைக்கப்படுவார். அதோபோல, இரண்டாம் நிலையில் இருந்த உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் என்று அழைக்கப்படுவார் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.