காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் பிரதமர் மோடி
தீபாவளியைக் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள நௌசெரா பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் .
அதில் ஒரு பகுதியாக இனிப்புகளை ராணுவ வீரர்களுக்கு வழங்கி அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைப் பரிமாறினார்.
இனிப்புகள் வழங்கிய பின் ராணுவத்தினரிடம் பேசிய மோடி ,’ நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் . சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் இந்தியவர் அனைவரும் பெருமைப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்ததோடு தாக்குதல்களில் இறந்த வீரர்களுக்கு தன்னுடைய மரியாதையை செலுத்தினார்.