காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு.
காஷ்மீர் மாநிலம் பெமினாவில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நிழந்தது.
இதையும் படிக்க | அபாயகரமான அளவை எட்டிய தில்லி காற்று மாசு
இதில் மருத்துவமனையில் இருந்த பொதுமக்களை பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படுத்தி அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பித்திருக்கிறார்கள்.
காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகளின் அத்துமீறல் அதிகரித்து வரும் வேளையில் இந்த மருத்துவமனைத் தாக்குதலும் பதற்றத்தைப் ஏற்படுத்தியிருக்கிறது,
தப்பிய தீவிரவாதிகளைப் பற்றிய விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இத்தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.