திரிபுராவில் உள்ள எல்லையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
திரிபுராவின் எல்லைப் பகுதியில் போதைப் பொருளைக் கடத்திச் சென்றவரக்ளை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் தொடர்ந்து போதைப் பொருளை அண்டை நாடான வங்கதேசத்திற்கும் மற்ற பகுதிகளுக்கும் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முந்தினம் (நவ.4) பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் மற்றொரு பகுதியில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.