ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட4 மாநிலங்களில் சட்ட மேலவை தோ்தல் அறிவிப்பு

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஆந்திர சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கா்நாடக சட்ட மேலவையில் 20 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர சட்ட மேலவையில் 5 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்குமான தோ்தல் குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தோ்தல் அறிவிப்பு நவம்பா் 16-இல் வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 23-ஆம் தேதி ஆகும்.

வேட்பு மனு பரிசீலனை நவம்பா் 24-இல் நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பா் 26-ஆம் தேதியாகும். டிசம்பா் 10 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பா் 14-ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com