ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஆந்திர சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கா்நாடக சட்ட மேலவையில் 20 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர சட்ட மேலவையில் 5 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்குமான தோ்தல் குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தோ்தல் அறிவிப்பு நவம்பா் 16-இல் வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 23-ஆம் தேதி ஆகும்.
வேட்பு மனு பரிசீலனை நவம்பா் 24-இல் நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பா் 26-ஆம் தேதியாகும். டிசம்பா் 10 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பா் 14-ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.