காலநிலை மாறிவருவதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் சத் பூஜை சிறப்பு நிகழ்ச்சியையொட்டி கிழக்கு கித்வாய் நகரில் உள்ள கோயிலில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவத் துறை சார்பில் டெங்கு பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவையான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
காலநிலை மாறிவருகிறது. இதனால் அடுத்த 7 முதல் 10 நாள்களுக்குள் டெங்கு பரவல் கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.