தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெரனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வரும் மாநாட்டை சீனா மற்றும் பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது.