பஞ்சாபில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக்கி முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட உத்தரவில்,
“பஞ்சாப் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்க படுகிறது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அலுவலகங்களிலும் பஞ்சாபி கட்டாய மொழியாக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்.”