இந்தியாவில் இதுவரை 112.97 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 59,75,469 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,12,97,84,045 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
அதேபோன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 125 கோடிக்கும் மேற்பட்ட (1,25,74,91,730) தடுப்பூசிகள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 19.55 கோடிக்கும் மேற்பட்ட (19,55,55,996) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 43,40,97,627 இரண்டாம் தவணை - 17,34,44,599 |
45 - 59 வயது | முதல் தவணை - 17,86,66,772 இரண்டாம் தவணை - 10,58,01,615 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,19,42,501 இரண்டாம் தவணை - 7,15,35,291 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,80,660 இரண்டாம் தவணை - 93,42,630 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,74,266 இரண்டாம் தவணை - 1,61,98,084 |
மொத்தம் | 1,12,97,84,045 |
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 8,865 பேருக்கு தொற்று: 287 பேர் பலி