பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களில் 20 பேர் விடுதலையாகியிருக்கிறார்கள்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 20 பேர் பாகிஸ்தானின் லந்தி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்களும் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின் தீவிர சோதனைகளுக்குப் பின் மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.