பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலையை ரூ.5 குறைக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5, டீசல் ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பாஜக ஆளும் மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து அறிவித்தன. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.