இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி 115 கோடியைக் கடந்தது

நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைக் கடந்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைக் கடந்தது. 
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு பிரிவினருக்கும் படிப்படியாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது 18 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. 

கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி இந்தியா எட்டியது. 
இந்த நிலையில் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை தற்போது 115 கோடியைக் கடந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com