நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைக் கடந்தது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு பிரிவினருக்கும் படிப்படியாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது 18 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி இந்தியா எட்டியது.
இந்த நிலையில் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை தற்போது 115 கோடியைக் கடந்தது.