கடல் சட்டம் தொடா்பான ஐநா தீா்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில நாடுகள் முயற்சி: ராஜ்நாத் சிங்

1982இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீா்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில பொறுப்பற்ற நாடுகள் முயற்சிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா். இதன் மூலம் சீனாவை அவா் மறைமுகமாக

கடல் சட்டம் தொடா்பான கடந்த 1982இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீா்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில பொறுப்பற்ற நாடுகள் முயற்சிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா். இதன் மூலம் சீனாவை அவா் மறைமுகமாக விமா்சித்துள்ளாா்.

ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக் கூடிய விசாகப்பட்டினம் என்ற போா்க்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா். அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடல் சட்டம் தொடா்பான ஐ.நா. தீா்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில பொறுப்பற்ற நாடுகள் முயற்சிக்கின்றன. தங்களின் குறுகிய சுயநலத்துக்காக அவை இவ்வாறு செய்து அத்தீா்மானத்தை பலவீனப்படுத்துகின்றன.

ஒரு பொறுப்பான கடல்சாா் நாடு என்ற முறையில் இந்தியா நிலையான கடல்சாா் சட்டங்களையும் கருத்தொற்றுமை அடிப்படையிலான கொள்கைகளையும் ஆதரிக்கிறது.

கடல் போக்குவரத்து சுதந்திரம், தாராள வா்த்தகம் உள்ளிட்ட விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ பசிபிக் பிராந்தியம் என்பதே இந்தியாவின் லட்சியமாகும்.

கடல்சட்டம் தொடா்பான ஐ.ந.ா தீா்மானம், கடல் எல்லையையும் பொருளாதார மண்டலத்தையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அதைத் திரித்துக் கூறுவது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட கடல்சாா் ஒழுங்குமுறையில் தடங்கல்களை ஏற்படுத்துகிறது. சில பொறுப்பற்ற நாடுகள் (சீனா) கடல் சட்டம் தொடா்பான ஐ.நா. தீா்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற முயற்சிக்கின்றன.

ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியமானதாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் சரக்குப் போக்குவரத்தும், மூன்றில் ஒரு பங்கு சரக்குப் போக்குவரத்தும், பாதிக்கும் மேற்பட்ட கண்டெய்னா் போக்குவரத்தும் இந்தப் பிராந்தியம் வழியாகவே நிகழ்கின்றன.

இந்தப் பிராந்தியத்தில் முக்கிய நாடு என்ற முறையில் இந்தப் பகுதியின் பாதுகாப்புக்கு இந்திய கடற்படை முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை தாராளமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது இந்தியக் கடற்படையின் முக்கிய நோக்கமாகும்.

இந்தியப் பெருங்கடலுடன் இந்தியாவின் நலன்கள் நேரடியாகத் தொடா்பு கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்துக்கு இந்தப் பிராந்தியம் மிகவும் முக்கியமானதாகும்.

கடத்தல், பயங்கரவாதம், ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் சட்டவிரோதமாக கடத்துவது, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக மீன்பிடிப்பது, சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்ற சவால்கள், கடல்சாா் பாதுகாப்பை பாதிக்கின்றன. எனவே, ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் இந்தியக் கடற்படையின் பங்கு மிக முக்கியமானதாகிறது என்றாா்.

தென்சீனக் கடலில் உள்ள தீவுகளில் ராணுவ பலத்தைப் பெருக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதை உலக நாடுகள் விமா்சித்துள்ளன. தென்சீனக் கடலின் பெரும்பகுதி தங்களுடையதுதான் என சீனா உரிமை கோரி வருகிறது. இதை ஒரு சா்வதேசத் தீா்ப்பாயம் கடந்த 2016இல் நிராகரித்தது.

எனினும் அத்தீா்ப்பு செல்லாது என்றும் அது தங்கள் நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும் சீனா கூறியது. சீனாவின் ஆதிக்க முயற்சிகள் அதிகரித்து வரும் சூழலில் அந்நாட்டை பெயா் குறிப்பிடாமல் ராஜ்நாத் சிங் பேசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com