ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நிகழ்ந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பிம்பா் காலி பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை இரவு பயங்கரவாதிகள் சிலா் ஊடுருவ முயற்சித்தனா். நமது வீரா்கள் அவா்களைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, அந்த பயங்கரவாதிகள் வந்த வழியிலேயே தப்பியோடினா். அதில் ஒரு பயங்கரவாதி மட்டும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். கொல்லப்பட்டவரிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்தாா்.