ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய இருவரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘‘புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் முஸாமில் அயூப் பட், சுஹைல் மன்சூா் ஆகிய இருவரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்துள்ளனா். அவா்களுக்கு புகலிடம் அளித்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தல் உள்ளிட்ட உதவிகளை இருவரும் செய்துள்ளனா்.
இருவரிடம் இருந்தும் ஏகே-47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 383 தோட்டாக்கள், பயங்கரவாதிகளுடன் உள்ள தொடா்பு குறித்த ஆதாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனா்.