சோனியா காந்தியின் காலம் முடிவடைந்து விட்டதாக பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்தது குறித்து செய்தியாளர்களிடம் திலீப் கோஷ் கூறியதாவது:
இதுபோன்ற நாடகங்கள் மிகவும் பழமையானவை. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சித் தலைவராக விரும்புகிறது. அதேபோல் மம்தா பானர்ஜியும் தலைவராக விரும்புகிறார். சோனியா காந்தியின் காலம் முடிவடைந்துவிட்டது என்றார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.