பஞ்சாப் அரசியலில் தொடரும் திருப்பம்: முதல்வர் சரண்ஜீத் இன்று தில்லி பயணம்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று தில்லி சென்று கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி
முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று தில்லி சென்று கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் மூத்த அதிகாரிகளின் பணி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தலைவர்களும் ராஜிநாமா செய்து வருகின்றனர்.

இதையடுத்து, முதல்வர் சரண்ஜீத்தின் அழைப்பை ஏற்று நேற்று மாலை சித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் இன்று தில்லி செல்லவுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com