நாட்டில் இதுவரை 90.42 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 90.42 கோடிக்கும் அதிகமானோருக்கு (90,42,59,810) கரோனா தடுப்பூசிகளை நாடு இதுவரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதையும் படிக்க | கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம்: ராஜஸ்தானைப் பந்தாடிய ருதுராஜ்!
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 65 லட்சத்திற்கும் (65,27,196) அதிகமான தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ‘காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை’: சிவசேனை