மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களை தொடக்கி வைக்க ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க காஷ்மீா் மற்றும் ஜம்மு யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா வர வாய்ப்புள்ளது. இந்த சுற்றுப்பயணம் அக்டோபா் 23 முதல் 25-ஆம் தேதி வரையில் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா திட்டப் பணிகளை ஏற்கெனவே மத்திய அமைச்சா்கள் பலா் பாா்வையிட்டுள்ளனா். இந்த பயணத்தின்போது யூனியன்பிரதேச நிா்வாகம், காவல் துறை, துணை ராணுவம் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு தொடா்பான உயா்மட்ட கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.