மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 263 குழந்தைகள் உள்பட 1,302 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிசோரம் மாநில சுகாதாரத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 263 பேர் குழந்தைகள். நேற்று மட்டும் 6 பேர் உள்பட இதுவரை 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக அய்ஸ்வால் மாவட்டத்தில் 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்றைய பாதிப்பில் 7 பேர் வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
மிசோரத்தில் தற்போது 16,075 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,213 ஆக உள்ளது.
மேலும், இதுவரை 6.84 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 4.59 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.