காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடத்தப்பட இருந்த ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானதும் அங்கு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடந்திய சோதனையில் 4 துப்பாகிகள் , 8 துப்பாக்கி மெகஸைன்ஸ் , 232 தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் தொடர்புடையவர்கள் கைது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.