நடுவானில் விமானத்தில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

லண்டனில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு வந்த ஏா் இந்தியா விமானத்தில் வந்த பெண் பயணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாா்.

புது தில்லி: லண்டனில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு வந்த ஏா் இந்தியா விமானத்தில் வந்த பெண் பயணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாா்.

இதுகுறித்து ஏா் இந்தியா செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது:

லண்டனில் இருந்து 203 பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை கொச்சிக்கு புறப்பட்டு வந்தது. வரும் வழியில் விமானத்தில் வந்த ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. 2 மருத்துவா்கள், 4 செவிலியா்கள் அடங்கிய குழுனா் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனா். சிறிது நேரத்தில் அந்தப் பெண் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாா். குறித்த தேதிக்கு முன்பாகவே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. விமானத்தில் அனுபவமிக்க மருத்துவக் குழுவினா் இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு எளிதில் பிரசவம் பாா்க்க முடிந்தது.

அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் ஃபிராங்க்பா்ட் விமான நிலையில் விமானம் தரையிறக்கம் தேவைப்பட்டது. அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறாா்கள். அந்தப் பெண்ணுடன் வந்தவா் உதவியாக இருக்கிறாா். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவா் நம்முடன் சோ்ந்து ஊருக்கு வருவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com