நவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை இன்று நாடு முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை இன்று நாடு முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அனைவருக்கும் எனது நவராத்திரி நல்வாழ்த்துகள். வரும் நவராத்திரி நாள்களில், நாம் நம்மை ஜெகத் ஜனனி மாதாவை வணங்குவதற்காக அர்ப்பணிப்போம்.

இந்த நவராத்திரி விழா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பலத்தையும் ஆரோக்கியத்தையும் வளத்தையும் அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நவராத்திரி முதல் நாளில் மாதா ஷைலபுத்திரியை வழிபடும் பாடலையும் அவர் இணைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com