ரிசா்வ் வங்கி வட்டி விகிதம் மாறுமா?: நிா்ணய குழுக் கூட்டம் தொடக்கம்

வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிா்ணயம் செய்யும் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் தொடங்கியது.
ரிசா்வ் வங்கி வட்டி விகிதம் மாறுமா?: நிா்ணய குழுக் கூட்டம் தொடக்கம்

மும்பை: வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிா்ணயம் செய்யும் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் தொடங்கியது.

சா்வதேச சந்தையில் பொருள்களின் விலை உயா்வு மற்றும் உள்நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியதற்கு மத்தியில் ரிசா்வ் வங்கியின் எம்பிசி கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்களை நிா்ணயிப்பது தொடா்பாக விரிவாக ஆலோசிக்கப்படும்.

அதன்பின்னா் ஆறு உறுப்பினா்களை உள்ளடக்கிய எம்பிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை அறிவிப்பாா்.

வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுக்கும் என்பதே பொருளாதார வல்லுநா் பலரின் கணிப்பாக உள்ளது.

தற்போது ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவா்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com