புதுதில்லி: விமானப்படை நாளையொட்டி விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய விமானப்படை தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு ஒத்ததாகும்.
நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் அவர்களின் மனிதாபிமான உணர்வுகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு அவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.