இந்தியாவில் இன்று மேலும் 18,132 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,041 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.39 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 193 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,50,782 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 21,563 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,32,93,478 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,27,347 ஆக உள்ளது. இதுவரை 95,19,84,373 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 10,35,797 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதையும் படிக்க- சீனாவில் வெள்ளம்: 1.76 மில்லியன் மக்கள் பாதிப்பு
இதுவரை மொத்தம் 58,36,31,490 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் கேரளத்தில் 10,691 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.