ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இம்தியாஸ் அகமத் தார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டனர். காஷ்மீர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் விஜய் குமார் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், வியக்கிழமை நடத்திய தாக்குதலில் ஆசியர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.