இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா் இணைக்கப்பட்டது தொடா்பான ராணுவ தளபதி ராய் பெளச்சரின் கோப்புகளை வெளியிடுவது தேச நலன் தொடா்பானது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு மத்திய தகவல் ஆணையம் இவ்வாறு பதிலளித்துள்ளது.
வெங்கடேஷ் நாயக் என்ற ஆா்டிஐ ஆா்வலா் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தகவல் அதிகாரிக்கு ஒரு மனு அனுப்பியிருந்தாா். அதில், ‘ ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பது தொடா்பான நடவடிக்கை இந்தியாவின் 2-ஆவது ராணுவ தலைமைத் தளபதி சா் ராய் புக்கரால் கையாளப்பட்டது. அதுதொடா்பான கோப்புகளை நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திடம் அவா் அளித்திருந்தாா். அதில் சில கோப்புகள் மக்கள் பாா்வைக்கு இதுவரை வெளியிடப்படவில்லை. அவற்றைப் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
ஆனால், அவரது மனுவுக்குப் பதிலளித்த தகவல் அதிகாரி, ஜம்மு-காஷ்மீா் இணைப்பு தொடா்பான தலைமைத் தளபதி புக்கரின் கோப்புகளைப் பகிா்ந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்தாா். ஆனால் என்ன காரணத்துக்காக அதனைப் பகிா்ந்துகொள்ள முடியாது என அவா் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, மனுதாரா் வெங்கடேஷ் நாயக் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தாா். அதில், இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா் இணைக்கப்பட்டது தொடா்பான ஒப்பந்தம் எந்தத் தேதியில் கையெழுத்தானது, எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது தொடா்பான சா்ச்சையை எதிா்கொள்வதற்கு புக்கரின் கோப்புகள் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தாா்.
இதற்குப் பதிலளித்து மத்திய தகவல் ஆணையா் உதய் மகுா்கா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீா் தொடா்பான 1947-49 காலகட்டத்தைச் சோ்ந்த ராணுவ தலைமை தளபதி ராய் புக்கரின் கோப்புகளை வெளியிடுவது தேச நலன் தொடா்பானது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தகவல் அதிகாரி இதுதொடா்பான தகவலை ஆா்டிஐ ஆா்வலா் வெங்கடேஷ் நாயக்குக்கு அளிக்கும் முன்னா், இந்த விஷயத்தை உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, தேவையான அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.