கர்நாடகத்தில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கர்நாடகத்தின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 8.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கட்டிடங்களில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதனால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்து தகவல் ஏதுமில்லை.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | விஜயதசமிக்கு கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா? உயர் நீதிமன்றம்