பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் தேங்கியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
பெங்களூரு முழுவதும் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் நேற்று மாலை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் தேங்கியது. இதனால், விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வந்தனர்.
மேலும், விமான நிலையத்திற்கு வெளியே கார் செல்ல முடியாத அளவிற்கு நீர் தேங்கியுள்ளதால், காரில் வருபவர்கள் அங்கிருந்த டிராக்டர் மூலம் உடைமைகளுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
பெங்களூருவில் இருந்து விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை, கொச்சி, புணே, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் கிளம்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.