லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை நேரில் சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மனு அளிக்கவுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | லக்கிம்பூருக்கு இன்று மீண்டும் செல்கிறார் பிரியங்கா காந்தி
இந்த வன்முறையில் நியாமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.