பயங்கரவாதத்தின் ஆதரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாடினார்.
அப்போது பேசிய அவர், ஆப்கனிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆப்கானிஸ்தானில் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.
தீவிரவாதம், போதைப்பொருள், துப்பாக்கி கடத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆங்கிலா மெர்கல் உள்ளிட்டோர் பங்கேற்றார்.