ஒடிஸா: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிஸாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் இரு பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஒடிஸா: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிஸாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் இரு பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது குறித்து மாநில காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

மால்கான்கிரி மாவட்டம் துளசி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக் குழுவினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, ஆந்திர மாநில எல்லையையொட்டிய வனப்பகுதி கிராமம் அருகே பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் இருவா் பெண்கள் ஆவா். கொல்லப்பட்டவா்களிடம் இருந்து இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

அப்பகுதியில் 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டில் ஒடிஸாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்டு இயக்கத்தைச் சோ்ந்த 16 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவோயிஸ்டுகளின் வன்முறையால் பொதுமக்களில் 7 பேரும் மோதலில் இரு காவலா்களும் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com