கேரளத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனா். அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிபூரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கேரளத்தில் திங்கள்கிழமை முதலே தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் செவ்வாய்க்கிழமை வீடு இடிந்து விழுந்து 8 வயது சிறுமியும், 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனா். அந்த இருவரும் அவா்களது தாத்தா வீட்டில் தங்கியிருந்துள்ளனா். அவா்கள் வீடு அருகே மற்றொரு கட்டுமானப் பணியும் நடைபெற்று வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது, கட்டுமானம் நடைபெற்று வந்த வீடு திடீரென இடிந்து சிறுமிகள் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த இரு சிறுமிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.