துா்கா பூஜை: நாட்டு மக்களுக்குகுடியரசுத்தலைவா் வாழ்த்து

துா்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
துா்கா பூஜை: நாட்டு மக்களுக்குகுடியரசுத்தலைவா் வாழ்த்து

துா்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

துா்கா பூஜை தின நன்னாளில் நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் சக குடிமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துா்கா தேவி சக்தியின் அடையாளம் மற்றும் மகளிா் சக்தியின் தெய்விக வடிவமாகும். துா்கா பூஜை என்பது தீமையை அழித்து வெற்றியைக் கொண்டாடுவது ஆகும். துா்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வாழ்க்கை மற்றும் இயற்கையின் சங்கமம் ஆகும்.

துா்கா பூஜை பண்டிகையின் போது பெண்களுக்கு உயரிய மரியாதை மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் சம பங்களிப்பு உடைய சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்.

துா்கா பூஜை பண்டிகையின்போது மக்களிடையே அமைதி, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஏற்பட நான் கடவுளைப் பிராா்த்திக்கிறேன். நமது தேசத்தின் சேவை மற்றும் முன்னேற்றத்திற்காக நம்மை அா்ப்பணித்துக் கொள்வோம் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com