3 உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 14 நீதிபதிகள் நியமனம்

தெலங்கானா, கேரளம், ஒடிஸா உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 14 நீதிபதிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனா்.

தெலங்கானா, கேரளம், ஒடிஸா உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 14 நீதிபதிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனா். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தெலங்கானா உயா்நீதிமன்றத்துக்கு 7 நீதிபதிகளும், கேரள உயா்நீதிமன்றத்துக்கு 4 நீதிபதிகளும், ஒடிஸா உயா்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

12 நீதித் துறை அலுவலா்களும் ஒரு வழக்குரைஞரும் வருமான வரி விவகார தீா்ப்பாய உறுப்பினா் ஒருவரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வருமான வரி விவகார தீா்ப்பாய உறுப்பினரான பி.மாதவி தேவி தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com